Tuesday, February 9, 2010

வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு முறையினால் என்ன பயன் ?

யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

ஒதுக்கீடு முறையினால் என்ன பயன்?

பல்லவன் பேருந்துகளில் முன் பகுதியில் இருக்கும் இருக்கை " உடல் ஊனமுற்றவர்க்கு " என இருக்கும். அதாவது, பேருந்து நிறுத்தத்தில் கூட்டத்தில் இடிபட்டு, எப்படியோ வர முடிந்த ஊனமுற்றோருக்கு உள்ளே வந்த உடன் அந்த இருக்கை அளிக்கப்படும். ஆனால், அவர்களைக் கேட்டுப் பாருங்கள்; அவர்கள் சொல்லுவார்கள்: எங்களுக்கு பேருந்தில் ஏறி உள்ளே வருவது தான் மிகச் சிரமமான காரியம். அதற்கு தான் எங்களுக்கு முன் உரிமை வேண்டும். உள்ளே வந்து விட்டால், உட்கார எங்களுக்கு முன் உரிமை இல்லாவிட்டால் பரவாயில்லை என்பர்.
அதாவது, அவர்கள் கல்வி கற்க உதவி செய்தால், முன் உரிமை அளித்தால், தானாகவே வேலையும் தேடிக் கொள்ள முடியும். இன்ன பிற வழிகளையும் தேடிக் கொள்வர்.

நம் நாட்டில் உயர் கல்வியில் வேலையில் தரப்படும் ஒதுக்கீட்டை விட, அவர்களுக்கு, ஆரம்பக் கல்வியிலும், நடுநிலைப் பள்ளியிலும் ஒதுக்கீடு இல்லை -- அனைத்து வசதிகளும் விடுதி, உணவு, உடை, கொடுத்து, படிக்க வைக்க வேண்டும். இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு முற்றும் பொருந்தும்.
அறுபதுகளில் மற்றும் எழுபதுகளில் துவங்கப் பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகள் பார்த்து இருக்கிறேன். அது போல் மிக அதிக எண்ணிக்கையில் கடந்த முப்பது ஆண்டுகளில் வந்துள்ளனவா என தெரியவில்லை. அரசு கவனம் உயர் கல்வியைப் பற்றியே அதிகம் இருப்பது அனாவசியம். அவர்கள் ஒவ்வொரு தாலுக்காவிலும் தாழ்த்தப்பட்டவர்க்கு மாணவர் விடுதி அமைத்து அவர்களுக்கு அரசுப் பள்ளிகள் தான் என்றில்லாமல்,நல்ல பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கு டியூஷன் கூட எடுத்து, அவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று தேற வகை செய்ய வேண்டும்.. பின்னர் அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அதற்கு உதவ வேண்டும்.

ஏதோ அரசியல் நிர்ணயச் சட்டத்தில் உள்ளது என்று பதினைந்து சதவீதம் ஒதுக்கீடு எல்லா மட்டங்களிலும் அறிவிப்பு செய்தால் போதாது.

சொல்லப் போனால், தாழ்த்தப் பட்ட இனத்தவர் வீட்டில், குழந்தை பிறந்தவுடன் அரசு தத்து எடுத்துக் கொண்டு, அக்குழந்தை வளர ஊட்டமான சத்து உணவு அல்லது பேணி பராமரிபாதர்கேன்று மானியம் கொடுத்து வர வேண்டும்; அவர்கள் பள்ளிக்கு போகும் வயது வந்த உடன், விடுதிகளில் வைத்து பராமரித்து கல்விக்கு முன் உரிமை கொடுத்து அவர்களை கல்வியில் ஒளிரச் செய்யவேண்டும்.

இது போல் ஓரிரண்டு தலைமுறைக்கு செய்து விட்டால் மூன்றாம் தலைமுறை எங்களுக்கு ஒதுக்கீடு வேண்டாம் என அறிவிக்கும் என்பது என் கனா.

Sunday, February 7, 2010

நான் இட்ட ஒரு பின்னூட்டம்

Pl see: Thiruchchikkaaran's blog in Wordpress.com
ina veri + mozhi veri+ bal theckeray


இந்த தலைப்பு இந்தியர்கள் அனைவருக்கும் ஆர்வம் உள்ளது என்றாலும், வெளி மாநிலத்தில் உள்ள என்போன்றவர்களுக்கும், வெளி நாடுகளில் பணி புரியும் தமிழர்களுக்கும், தமிழ் நாட்டில் உள்ள பிற மொழி, பிராந்திய வர்களுக்கும் குறிப்பாக ஆர்வம் உள்ள விஷயம்.

அரசு வேலைகள் என்றில்லை, semi-skilled மற்றும் unskilled வேலைகளுக்கு கூட வெளி மாநிலத்தவர் வந்தால் தாக்கரேக்கள் சீறுவது -- மன்னிக்கவும் -- நியாயமோ எனத் தோன்றுகிறது. இது பல நூற்றாண்டுகளாக நடந்து வருவது தான். ஆனால் விடுதலைக்குப் பின் unskilled வேலைகளுக்கு கூட இன்னொரு மாநிலத்திற்கு செய்யும் அளவு சொந்த மாநில நிலை இருப்பது பரிதாபம். சிற்றுந்தி ஓட்டுனர் வேலைக்கு துபாய் செல்லும் மலையாளிகள், தமிழர்கள் போலே தான். (இல்லை என்றால் வடிவேலு பார்த்திபன் கூட வரும் படத்தில் சொல்லும் வேலை : கக்கூசு கழுவுவது ). அந்த நாடுகளிலே மக்கள் தொகை குறைவாக இருக்கும் பொது இதை ஏற்றுக்கொள்ளுபவர்கள், உள்ளூரில் இந்த தொழிலை செய்வதற்கு நபர்கள் இருக்கும் பொது வேற்று மாநிலத்தவர்கள், நாட்டவர்கள் வருவதால், ஒன்று கூலிகள்/சம்பளம் குறைகிறது; ( கீழ்வெண்மணி ) அல்லது உள்ளூர் காரர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் . தாக்கரேயும் ரிசர்வ் பேங்க் கவர்னர் தம் மாநிலத்தவர் இல்லை என்று சொல்லவில்லை; டாக்சி ஓட்டுபவர்கள், முடி திருத்துபவர்கள், சாலை தொழிலாளர்கள் பீகார், ஜார்கண்ட், உத்தர் பிரதேஷ் முதலிய மாநிலத்திலிருந்து வந்து, தம் ஊரில் உள்ள சமூதாயத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு இடைஞ்சல் என்று சொல்வதில் பெரும் தவறு இல்லை; அவர் சொல்லும் விதம், எரியும் கல் தான் வலியை ஏற்படுத்துகிறது. இதனால் மராட்டிக் காரர்களுக்கு பொருள் ஈட்டும் வாய்ப்புகள் குறைந்து உள்ளது கண்கூடு. பொருள் ஈட்டும் நிமித்தம் வேற்று ஊர்களுக்கு, மாநிலங்களுக்கு, நாட்டிற்கு, கண்டத்திற்கு செல்வது வட இந்தியர் ( ஆப்ரிகா, பிஜி, யு.கே, அமெரிக்கா மேற்கு இந்திய தீவுகள், மௌரீஷியஸ்), சர்தார்ஜி / பஞ்சாபிகள் : லண்டன், கனடா, தமிழர்: இலங்கை, மலேய, பர்மா, விஎட்நாம், தென் ஆப்ரிகா, மேற்கு இந்திய தீவுகள், மௌரீஷியஸ்,; ஒரியாக் காரர்கள் : இலங்கை; எனப் போயிருந்தபோதும் மாராட்டியர்கள் பெரும் எண்ணிக்கையில் போகவில்லை என நினைக்கிறேன்; அதாவது பொருள் ஈட்டுவதற்காக தொலை தூரம் செல்லும் வழக்கம் அவர்களிடம் ரத்தத்தில் இல்லை எனக் கொள்ளலாம்.
சரி' இப்போது என்ன செய்யலாம் ?
1. வேற்று மாநில அரசுகள் தம் மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகள் அதிகரிக்க உருப்படியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
2. மும்பையில் சாலைகள், வீட்டு வசதி, குடி நீர், கழிவு போன்ற கட்டமைப்புகள் இவர்கள் அங்கு வந்து குடியேறுவதால் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது; ஆகவே, அவர்கள் (பீகார், உத்தர் பிரதேஷ், அரசுகள் மராட்டி மாநிலத்திற்கு மானியம் வழங்க வேண்டும்.
3. ஒரு குறிப்பிட்ட அளவு ஊதியத்திற்கு கீழே வெளி மாநிலத்திவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என சட்டம் செய்வதில் தவறு இல்லை.
4. வரி விலக்குகள் முதலியவை வழங்கி எதிர் காலத்தில் தொழில்கள் வேறு பகுதிகளில் தொடங்க மைய அரசு வகைசெய்ய வேண்டும்.



திருசிசிக்காரன் ப்லொக்கில் இட்ட பதிவுக்கு என் பின்னூட்டம்;



காண்க: www.