Monday, November 29, 2010

கூட்டஞ்சோறு பதிவில் ஒரு பின்னூட்டம்

ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி
http://koottanchoru.wordpress.com/2010/11/28/2-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b7%e0%ae%99/#comment-3807
//தமிழக அரசின் ரெவின்யூ டிப்பார்ட்மெண்டில் நிலவும் லஞ்சத்தின் நிலமை அதற்கான காரணங்கள் ஆகியவற்றை ஒளிவு மறைவின்றிப் பேசினார்.//
// ஒரு அரசு அதிகாரியே அரசாங்கத்தில் நடக்கும் ஊழல்களை லஞ்ச லாவண்யங்களை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தியதுஆச்சரியமே. கலெக்டர் ஆஃபீசின் ஒவ்வொரு நிலையிலும் லஞ்சம் கொடுக்காமல் எதையுமே சாதிக்க முடியாது என்பதை விளக்கினார்//
என்று சொல்லிவிட்டு
//இந்த ஊழல்களையும், மிரட்டல்களையும், அராஜகங்களையும் நிறுத்த வேண்டுமானால் இந்தியா ஊழலில்லாத தேசமாக மாற வேண்டும் என்றால் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாத தன்னாட்சி அமைப்புகள் உருவாக்குவதே ஒரே வழி என்றார்//
இவ்வாறு சொல்வது ஏன் என்று புரியவில்லை.
அதாவது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதும், வாங்க சொல்வதும் அரசியல்வாதியா? லஞ்சம் அதிகமாக காரணம் அரசு அதிகாரிகள் தான் என்று உமா சங்கர் போன்ற சுத்தமான அதிகாரிகள் கூட ஒப்புக் கொள்ளாவிட்டால் அதை எப்படி களைவது?
சரி, ஒரு விஷயம். ஒரு அரசு அதிகாரி, அமெரிக்காவில் போய் இங்கு உள்ள சீரழிவுகளை பேசுவது முறையா?





யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

Thursday, November 11, 2010

பின்னூட்டம்:

http://tamilseermai.blogspot.com/2010/11/blog-post_07.html
வட மொழி ஒலிகளைக் குறிக்க தமிழில் புகுத்தப்பட்ட ஜ, , ஷ, ஸ, ஹ, க்ஷ, குறித்து பதிவு இட்டுள்ளீர்கள்.நாம் அறிந்த வரையில் உலகில் அதிகமாக ஒலிக்கும் மொழிகளில் வேற்று மொழி ஒலிகளைக் குறிக்க புதிதாக எழுத்துக்கள் சேர்க்க வில்லையே; தமிழில் என் சேர்க்க வேண்டும் என்பதே சாரம். உண்மை தான். தமிழில் சாதாரணமாக நாம் புழங்கும் ஒலிகளை தமிழில் எழுதிக் காட்ட முயல வேண்டும். உலகம் எங்கும் அதிகமாகப் பேசப்படும், அறியப்படும் ஆங்கிலத்தில் spelling வேறாகவும், pronunciation வேறாகவும் காட்டப் படுவது நாம் அறிவோம். அதாவது வேற்று மொழிச் சொற்களை புழங்க விட்டால், அவற்றை சரியான ஒலியுடன் உள்வாங்குவது நலம் பயக்கும் என்பது அதன் அடிப்படை. தமிழர்களைப் பொறுத்தவரை எழுதுவதே ஒலி என்ற இந்திய அணுகுமுறையில் வேறு மொழிகளில் இருந்து வந்து விட்ட- , வந்து கொண்டு இருக்கும் - சொற்களை ஒலிக்குறியீடு இட்டு (ஆங்கிலத்தில் உள்ளது போல்) காட்டும் முறை உருவாக்க வேண்டும். இரண்டு முக்கிய காரணங்களால் வேற்று மொழி சொற்கள் தமிழில் வருவதை தடுத்தல் கடினம்.
ஒன்று: உலகமயமாக்கல்; வேறு மொழி வினைச்சொற்களை தமிழ் படுத்த முடிந்தாலும், பெயர்கள், நாடுகள், அவற்றில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள் விளையாட்டு வீரர்கள் போன்றோரின் பெயரை தமிழர் சரியாக உச்சரித்தல் அவசியம். அதற்காக உலகில் உள்ள அனைத்து நாடுகளின், மொழிகளின் ஒலிக்குறியீடுகளை இறக்குமதி செய்யச் சொல்லவில்லை; ஜ, ஸ, ஷ,ஹ, முதலிய ஒலிகள் அதிகம் தேவைப் படுவது நாம் அறிந்ததே
. இன்னொன்று: தமிழகம் நாம் விரும்பியோ, விரும்பாமாலோ, இந்தியாவின் பகுதி ஆகிவிட்டது; அந்த இந்தியாவில் வட மொழிகளிலிருந்து பிறந்த மொழிகள், அவற்றை பேசுபவர் அதிகம். ஆகவே, அவற்றிலிருந்து இங்கு வந்து கழுத்தை அறுக்கும் சொற்கள் (விஷயம், பாவம்(bhaavam), முதலியன ) தவிரவும், மனிதர்கள், இடங்களின் பெயர்கள். தமிழகத்திற்கு வெளியே பணி நிமித்தம் வருபவர்கள் தங்கள் உச்சரிப்பினால் எவ்வளவு கேலிக்கு உள்ளாகிறார்கள் என அவர்களே சொல்ல முடியும். தமிழகத்திலேயே உள்ள கிணற்றுத் தவளைகள் இதை புரிந்து கொள்ளவே முடியாது.
சொல்ல விழைவது : தமிழர்கள் உச்சரிப்பில் கவனம் செலுத்தி, உச்சரிப்புக் குறியீடு உருவாக்கினால் இது போல வட மொழி ஒலிகளுக்காகஅந்நிய எழுத்துக்கள் வேண்டாம்.
நெற்குப்பை.தும்பி





யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

Friday, November 5, 2010

***********வாழ்த்து***********

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

மா.சேகர்
nerkuppai.thumbi@gmail.com





யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்